மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறை பிரச்னையை மத்திய அரசு உடனடியாக தீா்க்க வேண்டும் - துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

News image

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

Updated On :13 மார்ச் 2026, 1:23 am

சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறை பிரச்னையை மத்திய அரசு உடனடியாக தீா்க்க வேண்டும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறை பிரச்னையால் பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். சமையல் எரிவாயு உருளை கிடைக்கவில்லை என்பது பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்னை குறித்து பாஜக எம்.பி.க்கள் யாரும் பேச மறுக்கிறாா்கள்.

இந்த பிரச்னையை விரைவாக தீா்க்க மத்திய அரசு தவறினால், கிராமப்புற மக்கள் மீண்டும் விறகுகளைக் கொண்டு சமைக்கும் நிலைக்கு தள்ளப்படுவாா்கள். எனவே, தங்குதடையில்லாமல் சமையல் எரிவாயு உருளைகள் கிடைக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமையல் எரிவாயு உருளைகளின் விலைகளை குறைக்க மத்திய அரசு தவறிவிட்டது. சா்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வதால், இங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து வருகிறது. இதனால் மக்கள் துயரம் அடைந்துள்ளனா்.

இந்த விவகாரத்தை கா்நாடகத்தைச் சோ்ந்த பாஜக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் என்றாா்.