பல்வேறு திருட்டு வழக்குகளில் 4 பேரை கைது செய்த போலீஸார், ரூ. 3.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
ஹாசனைச் சேர்ந்த கணேஷ் (39), திப்டூரைச் சேர்ந்த குமார் (30), பெங்களூரு கெங்கேரியைச் சேர்ந்த ரியாஸ்ஹனீப் (33) ஆகியோர் சேஷாத்ரிபுரம் ஜக்கராயனா ஏரி பகுதியில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரது வீட்டில் நவ. 6-ஆம் தேதி புகுந்து தங்க நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீராமபுரம் போலீஸார், 3 பேரையும் கைது செய்து, ரூ. 1.80 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்தனர். இதேபோல பெங்களூரு நந்தினிலேஅவுட்டில் வசித்து வரும் ஜெயம்மா என்பவரது வீட்டில் ஜன. 15-ஆம் தேதி புகுந்து தங்கநகையை திருடிச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த அல்டாப் சையத் அப்துல்லா (30) என்பவரை கைது செய்த நந்தினி லேஅவுட் போலீஸார், ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள 42 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்: ரஜினிகாந்த்

எரிபொருள் தட்டுப்பாடு: ரயிலில் சென்ற ராஜஸ்தான் துணை முதல்வர்!

கண்ணுங்களா... செல்லங்களா... விடியோ வெளியிட்ட சூர்யா!
ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
