நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது

பல்வேறு திருட்டு வழக்குகளில் 4 பேரை கைது செய்த போலீஸார், ரூ. 3.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 9:24 am IST

பல்வேறு திருட்டு வழக்குகளில் 4 பேரை கைது செய்த போலீஸார், ரூ. 3.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
ஹாசனைச் சேர்ந்த கணேஷ் (39), திப்டூரைச் சேர்ந்த குமார் (30), பெங்களூரு கெங்கேரியைச் சேர்ந்த ரியாஸ்ஹனீப் (33) ஆகியோர் சேஷாத்ரிபுரம் ஜக்கராயனா ஏரி பகுதியில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரது வீட்டில் நவ. 6-ஆம் தேதி புகுந்து தங்க நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீராமபுரம் போலீஸார், 3 பேரையும் கைது செய்து, ரூ. 1.80 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்தனர். இதேபோல பெங்களூரு நந்தினிலேஅவுட்டில் வசித்து வரும் ஜெயம்மா என்பவரது வீட்டில் ஜன. 15-ஆம் தேதி புகுந்து தங்கநகையை திருடிச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த அல்டாப் சையத் அப்துல்லா (30) என்பவரை கைது செய்த நந்தினி லேஅவுட் போலீஸார், ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள 42 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.