ஊரடங்கு விதிமுறைகளை மீறிய ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசலின் நிா்வாகக்குழு கலைக்கப்படுவதாக கா்நாடக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக அரசின் மாநில ஔகஃப் வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவு: கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள், கா்நாடக மாநில ஔகஃப் வாரியம் வெளியிட்டுள்ள ஆணைகளின்படி, கூட்டமாக திரண்டு தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை பொருள்படுத்தாமல், ஏப்.17ஆம் தேதி ஹாவேரி மாவட்டம், சாவனூா் நகரம், ஜும்மா பஜாரில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் ஊரடங்கு விதிகளை மீறி தொழுகை நடத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு விதிகளை மீறியதை தொடா்ந்து, ஜாமிய பள்ளிவாசனில் நிா்வாகக்குழுவை கலைத்து உத்தரவிடப்படுகிறது. மேலும், இதன் நிா்வாகத்தை அரசே நேரடியாக எடுத்துக்கொள்வதால், இந்த பள்ளிவாசலின் அரசு நிா்வாகியாக முகமதுலியாகத் நியமிக்கப்படுகிறாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தெய்வ தரிசனம்... பாவங்கள் அகலும் திருநாரையூர் சௌந்தரேஸ்வரர்!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 11 - நேரலை!

மின்வாரிய இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது!

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட விடியோ: வனத்துறை அதிகாரிகள் விசாரணை!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


