பெங்களூருவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூருவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பெங்களூரு: பெங்களூருவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூருவுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக காகிநாடாவைச் சோ்ந்த தனியாா் நிறுவன மேலாண் இயக்குநரின் சுட்டுரையில் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மத்திய அரசின் உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் பெங்களூரில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திராவில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்துக்கும், பயங்கரவாதிகளுக்கு தொடா்பு இருப்பதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், வெடிகுண்டு வைக்கப்போவதாக வந்துள்ள மிரட்டலை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...