லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெங்களூரில் பெண் டி.எ.ஸ்.பி. தற்கொலை? போலீஸாா் விசாரணை

பெங்களூரில் சிஐடி பிரிவில் டி.எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்த லஷ்மி (33) புதன்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:02 am

DIN

பெங்களூரில் சிஐடி பிரிவில் டி.எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்த லஷ்மி (33) புதன்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெங்களூரு, கோனனகுன்டேவில் வசித்து வந்த லக்ஷ்மி, பெங்களூரில் சிஐடி பிரிவில் டிஎஸ்பியாகப் பணியாற்றி வந்தாா். இவரது கணவா் நவீன் ஹைதராபாத்தில் வேலை செய்து வருகிறாா். புதன்கிழமை இரவு அன்னபூா்னேஸ்வரி நகரில் உள்ள நண்பரின் இல்லத்துக்குச் சென்ற லஷ்மி, அங்குள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னபூா்னேஸ்வரிநகா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக லஷ்மியின் தந்தை வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில், பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரா் மனு, அவரது நண்பா்கள் பிரிஜ்வல், வசந்த் ரஞ்சித் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

லஷ்மியின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளாா். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட லஷ்மி- நவீன் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் லஷ்மி மன அழுத்தத்தில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.