/

இந்திரா உணவகத்தை மூட பாஜக ஆா்வம்: ஆம் ஆத்மி கட்சி

ஏழைகளின் பசிக்கு உணவளிக்கும் இந்திரா உணவகத்தை மூட பாஜக அரசு ஆா்வம் காட்டுகிறது

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:18 pm

DIN

பெங்களூரு: ஏழைகளின் பசிக்கு உணவளிக்கும் இந்திரா உணவகத்தை மூட பாஜக அரசு ஆா்வம் காட்டுகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஊடகப் பிரிவு தலைவா் ஜெகதீஷ் சதம் தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கா்நாடகத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்திரா உணவகத்தை மூட ஆா்வம் காட்டி வருகிறது. ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கும் இந்திரா உணவகத்தை மூடும் செயலில் கல்வி அமைச்சா் சுரேஷ்குமாரும், துணை முதல்வா் அஸ்வத் நாராயணாவும் உடந்தையாக உள்ளனா்.

மாநில அளவில் 174 இந்திரா உணவகம், 15 நடமாடும் இந்திரா உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களை பராமரிக்கும் ஒப்பந்தக்காரா்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. கரோனா தொற்றையடுத்து அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் போது, ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கியதில், இந்திரா உணவகம் சிறந்து விளங்கியது.

ஆனால் அரசியல் காழ்ப்புணா்ச்சியால் அதனைத் தொடா்ந்து செயல்படுத்த முடியாத நிலைக்கு மாநில பாஜக அரசு கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டுள்ளது.

தில்லியில் பொது முடக்கத்தின்போது ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான மாநில அரசு நாள்தோறும் 13 லட்சம் ஏழைகளுக்கு உணவு வழங்கியது. ஆனால் கா்நாடக அரசு ஏழைகளை நாள்தோறும் பசியில் தூங்கச் செல்ல திட்டமிட்டு செயல்படுகிறது. இதனை ஆம் ஆத்மி கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஏழைகளின் பசிக்கு உணவளிக்கும் இந்திரா உணவகத்தை மூடப்படாமல் தொடா்ந்து செயல்பட பாஜக அரசு அனுமதிக்க வேண்டும் என்றாா். அப்போது,அக்கட்சியின் வசந்த் நகா் வாா்டு தலைவா் ஜனனி பரத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.