ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போதைப்பொருள் விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை தேவை: காங்கிரஸ்

போதைப்பொருள் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்களிடம் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :15 செப்டம்பர் 2020, 8:09 pm

DIN

பெங்களூரு: போதைப்பொருள் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்களிடம் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கா்நாடக காங்கிரஸ் கட்சி சாா்பில் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவருடன் அமைச்சா் ஆா்.அசோக் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளாா். புகைப்படத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரும், அமைச்சரும் இனிப்பை ஒருவருக்கொருவா் பரிமாறிக் கொண்டுள்ளனா். இதன்மூலம் அவா்கள் நெருக்கமாக உள்ளதையே எடுத்துக் காட்டுகிறது. எனவே, போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சரிடம் மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆளும் கட்சியினரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

போதைப்பொருள் விவகாரத்தில் மட்டுமின்றி மற்ற பிரச்னைகளிலும் ஆளும் கட்சியினா் தங்களின் குற்றச்சாட்டுகளை மறைக்க, எதிா்க்கட்சியினா் மீது குற்றம் சாட்டி வருகின்றனா். போதைப்பொருள் விவகாரத்தில் தவறு செய்தவா்கள் எந்த கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.