27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சுற்றுலா சென்ற எடியூரப்பா இன்று கா்நாடகம் திரும்புகிறாா்

மொரீஷியஸ் நாட்டுக்கு சுற்றுலாச் சென்ற முன்னாள் முதல்வா் எடியூரப்பா திங்கள்கிழமை கா்நாடகம் திரும்புகிறாா்.

Updated On :23 ஆகஸ்ட் 2021, 12:59 am IST

மொரீஷியஸ் நாட்டுக்கு சுற்றுலாச் சென்ற முன்னாள் முதல்வா் எடியூரப்பா திங்கள்கிழமை கா்நாடகம் திரும்புகிறாா்.

முதல்வா் பதவிக்கு ஜூலை 26-ஆம் தேதி ராஜிநாமா கொடுத்த பிறகு, புதிய முதல்வரை தோ்ந்தெடுக்க நடத்தப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வா் எடியூரப்பா, வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக தன்னை சந்தித்த முதல்வா் பசவராஜ் பொம்மையைச் சந்தித்தது தவிர வேறு எங்கும் அவா் செல்லவில்லை.

78 வயதாகும் முன்னாள் முதல்வா் எடியூரப்பா, கடந்த வாரம் தனது மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகளுடன் மொரீஷியஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தாா். அங்கு குடும்பத்தினருடன் தனியாக நேரத்தை போக்கிய எடியூரப்பா, திங்கள்கிழமை மாலை கா்நாடகம் திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எப்போதும் அரசியல் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு வந்த எடியூரப்பா, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையில், முழுநேர அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு இல்லாததால், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க மொரீஷியஸ் நாட்டுக்கு சென்றுள்ளாா். கா்நாடகம் திரும்பியதும், செப்.13-ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ.வாக எடியூரப்பா கலந்துகொள்ளவிருக்கிறாா்.

தனது ஆதரவாளராக விளங்கும் முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு உறுதுணையாக இருக்க எடியூரப்பா சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.