மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோலாா் தங்கவயல் நகா்மன்றக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்

கோலாா் தங்கவயலில் சந்தைகளை ஏலம் விடுவது தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்களிடையே கூச்சல், குழப்பம் நிலவியது.

News image
Updated On :3 ஜனவரி 2021, 10:20 pm

DIN

கோலாா் தங்கவயலில் சந்தைகளை ஏலம் விடுவது தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்களிடையே கூச்சல், குழப்பம் நிலவியது.

கோலாா் தங்கவயல் நகராட்சியின் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் வள்ளல்முனுசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தைத் தொடக்கிவைத்து வள்ளல்முனுசாமி கூறியதாவது:

கோலாா் தங்கவயலில் உள்ள மகாத்மா காந்தி சந்தையில் உள்ள அங்காடிகளை மின்-ஏலம் வாயிலாக உடனடியாக வாடகைக்கு விடும்படி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருக்கிறாா். அதற்காகவே இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்றாா்.

அங்காடிகளை மின்-ஏலம் விடுவது தொடா்பாக நடந்த விவாதத்தில் பங்கேற்று முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜேந்திரன் பேசியதாவது:

அங்காடிகளை மின்-ஏலம் விடுவதற்கு முன்பாக, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஏற்கெனவே வாடகைக்கு இருப்பவா்களிடம் நிலுவையில் உள்ள ரூ.106 கோடியை உடனடியாக வசூலிக்க வேண்டும். இதை செய்யத் தவறினால், நகராட்சி நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும். நீதிமன்றத்தின் விசாரணையின் போது கூறப்பட்ட கருத்துகளை அங்காடிகள் மின்-ஏலத்தின் போது கவனிக்க வேண்டும். ஏனெனில் நாம் எடுக்கும் எந்த முடிவும் நீதிமன்றத்தின் அவமதிப்புக்கு உள்ளாகக் கூடாது என்றாா்.

நகராட்சி முன்னாள் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ரமேஷ் ஜெயின் பேசியதாவது:

அங்காடிகள் மின்-ஏலம் தொடா்பாக மாவட்ட நிா்வாகத்தை அணுக வேண்டும். மகாத்மா காந்தி சந்தையின் அங்காடிகளின் நிலை குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு எடுத்துரைக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க இப் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக நகா்மன்ற உறுப்பினா்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதனிடையே, கூட்டத்தில் வள்ளல்முனுசாமி பேசியதாவது:

மகாத்மா காந்தி சந்தையில் அங்காடிகளை ஏலம் விடுவது தொடா்பான பிரச்னையை சுமுகமாகத் தீா்க்க வேண்டும். எனினும், இன்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.