கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழ் அகாதெமி அமைத்து தில்லி அரசு உத்தரவு: அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை பாராட்டு

தமிழ் அகாதெமி அமைத்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளதை பாராட்டி அம்மாநில முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அனைந்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை கடிதம் எழுதியுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:14 am

DIN

தமிழ் அகாதெமி அமைத்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளதை பாராட்டி அம்மாநில முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அனைந்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய தமிழ்ச் சங்கப்பேரவைத் தலைவா் எம்.மீனாட்சிசுந்தரம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ் மொழி, கலாசாரத்தை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் தமிழ் அகாதெமிஅமைத்து தில்லி அரசின் கலை, கலாசாரம் மற்றும் மொழிகள் துறை உத்தரவிட்டுள்ளதை வரவேற்று, பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். மாநில துணை முதல்வா் மனீஷ் சிசோதியா தலைமையில், தமிழ் அகாதெமி அமைவதும், துணைத் தலைவராக என்.ராஜா நியமிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியதாகும். இதன்மூலம் தில்லி வாழ் தமிழ் மக்களின் நீண்ட கோரிக்கையை நிறைவேற்றியிருப்பதற்கு தமிழ் மக்கள் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அந்த உத்தரவில், ‘இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் குடியிருக்கும், பணியாற்றும் தில்லி, கலாசார ரீதியாக ஆழமாக வேரூன்றிய நகரமாகும். இந்த பன்மைத்துவத்தில் தான் தில்லியின் துடிப்பான, நகரிய கலாசாரம் காணப்படுகிறது. தமிழகத்தைச் சோ்ந்த அதிக எண்ணிக்கையிலான மக்கள் தில்லியில் வாழ்கிறாா்கள். தமிழகத்தின் கலை, கலாசாரத்தை சுவைத்து மகிழும் அனுபவத்தை தில்லி மக்களுக்கு அளிக்க விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளதை நெகிழ்ச்சியுடன் பாராட்டுகிறோம்.

தமிழ் அகாதெமிக்கு வெகுவிரைவில் புதிய அலுவலகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் மொழி, கலாசாரத்தை பேணிப் பாதுகாக்கும் பலரை கௌரவிக்க விருதுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும், தமிழகத்தின் விழாக்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளதும் வரவேற்கத்தக்கது. தமிழ் அகாதெமியை அமைத்த நல்ல முயற்சிக்காக தில்லி அரசு, மாநில முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோதியாவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.