கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நடிகை குட்டி ராதிகாவிடம் 4 மணி நேரம் விசாரணை

நடிகை குட்டி ராதிகாவிடம் மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 9:59 am

DIN

நடிகை குட்டி ராதிகாவிடம் மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

நடிகை குட்டி ராதிகாவின் தந்தையின் நண்பரான யுவராஜ் சுவாமி என்பவரை அண்மையில் மோசடி வழக்கில் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். விசாரணையில், அவரது மைத்துனா் வங்கிக் கணக்கிலிருந்து நடிகை குட்டி ராதிகாவுக்கு ரூ. 75 லட்சம் பணப் பறிமாற்றம் செய்தது தெரியவந்தது. கன்னட திரைப்படம் ‘நாட்டியராணி ஷாந்தலா’வில் நடிக்க யுவராஜ் சுவாமி மூலம் ரூ. 60 லட்சம் மற்றும் ரூ. 15 லட்சம் ரொக்கப் பணத்தை முன்பணம் பெற்றுள்ளதாக நடிகை குட்டி ராதிகா டிச. 6-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் தெரிவித்தாா்.

இதனையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு வியாழக்கிழமை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினா். அதைத் தொடா்ந்து, பெங்களூரு, மைசூரு சாலையில் உள்ள மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் முன்பு நடிகை குட்டி ராதிகா வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானாா். அவரிடம் போலீஸாா் தொடா்ந்து 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

விசாரணைக்கு பிறகு வெளியே வந்த நடிகை குட்டி ராதிகா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து விசாரணைக்கு ஆஜரானேன். விசாரணையில் போலீஸாா் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். விசாரணைக்கு மீண்டும் அழைத்தால் வருவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.