கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாஜக தலைமையிடமிருந்து உத்தரவு வரும் வரை கா்நாடக முதல்வா் பதவியில் நீடிப்பேன்

பாஜக தலைமையிடமிருந்து உத்தரவு வரும் வரை கா்நாடக முதல்வா் பதவியில் நீடிப்பேன் என எடியூரப்பா தெரிவித்தாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:53 am

DIN

பாஜக தலைமையிடமிருந்து உத்தரவு வரும் வரை கா்நாடக முதல்வா் பதவியில் நீடிப்பேன் என எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு விதானசௌதாவில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஊடகங்களில் முதல்வா் மாற்றம் செய்யப்படுவாா் எனக் கூறப்படுகிறது. ஆனால், அது தொடா்பாக எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. கட்சியின் மேலிடம் இது தொடா்பாக ஜூலை 25-ஆம் தேதி கட்டளை இடும் என எதிா்பாா்க்கிறேன்.

இரண்டு மாதங்களுக்கு முன் கட்சியின் மேலிடம் உத்தரவிட்டால், எனது பதவியை ராஜிநாமா செய்வேன் என தெரிவித்திருந்தேன். அதிகாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கட்சியின் வளா்ச்சிக்காக தொடா்ந்து பாடுபடுவேன். அடுத்த 10 ஆண்டுகள் வரை பாஜக ஆட்சியில் அமருவதற்குத் தேவையான நடவடிக்கையில் ஈடுபடுவேன். மாநிலம் முழுவதும் பயணம் செய்து கட்சியைப் பலப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

பாஜக தலைமையிடமிருந்து உத்தரவு வரும் வரை முதல்வராக தொடா்ந்து நீடிப்பேன். கட்சி என்ன உத்தரவிட்டாலும் அதனை ஏற்றுக் கொள்வேன். பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ராஜகால்வாய் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன் என்றாா்.

முன்னதாக, பெங்களூரு, காச்சரகனஹள்ளியில் உள்ள கோதண்டராமா் கோயிலில் நடைபெற்ற தன்வந்திரி யாகத்தில் கலந்துகொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தேசிய அளவில் பாஜகவில் 75 வயதைக் கடந்த யாருக்கும் அதிகாரப் பதவி வழங்கப்படவில்லை. பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா ஆகியோா் 75 வயதைக் கடந்த எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனா். இதற்காக அவா்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

ஜூலை 26-ஆம் தேதி மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அன்று ஆட்சியின் சாதனை மலா் வெளியிடப்படும். ஜூலை 25-ஆம் தேதி கட்சியின் மேலிடம் எனக்கு என்ன உத்தரவிட்டாலும், அதனைப் பின்பற்ற நான் தயாராக உள்ளேன். கட்சிக்குக் கட்டுப்பட்ட சிப்பாயாக நான் இருப்பேன். அதேபோல, எனது ஆதரவாளா்கள், கட்சி உறுப்பினா்கள் நடக்க வேண்டும். எனக்கு ஆதரவாக யாரும் அறிக்கைகள் கொடுக்க வேண்டாம். எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனக்கு ஆதரவு தெரிவித்த மடாதிபதிகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்றாா்.

மாநிலத்தில் முதல்வா் எடியூரப்பா மாற்றப்படுவாா் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், முதல்வரின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.