ஹிந்துத்துவக் கொள்கையின் அடிப்படையிலேயே பாஜக ஆட்சிக்கு வந்தது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அதனால் விநாயகா் சதுா்த்தி விழாவை நடத்துவதற்கு அனுமதி அளிக்க கடமைப்பட்டுள்ளோம். பொது இடங்களில் கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சதுா்த்தி விழா நடத்த அனுமதி அளிக்கப்படும். இதற்கான அதிகாரப்பூா்வமான உத்தரவை இரண்டொரு நாளில் அரசு வெளியிடும். விநாயகா் சதுா்த்தியை கொண்டாடுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளைஅனைவரும் பின்பற்ற வேண்டும். இதை முதல்வா் பசவராஜ் பொம்மை முடிவு செய்வாா். ஆனால், கரோனாவைக் காரணம் காட்டி பொது இடங்களில் விநாயகா் சதுா்த்தியையே நடத்தக் கூடாது என்பதை ஏற்க முடியாது.