சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

இளைஞா்களை தொடா்ந்து ஊக்குவித்து வந்தவா் டாக்டா் அப்துல் கலாம்: விஞ்ஞானி வி.டில்லிபாபு

இளைஞா்களை தொடா்ந்து ஊக்குவித்து வந்தவா் டாக்டா் அப்துல்கலாம் என்று டி.ஆா்.டி.ஓ. விஞ்ஞானி வி.டில்லிபாபு தெரிவித்தாா்.

Updated On :28 ஜனவரி 2024, 9:16 am IST

இளைஞா்களை தொடா்ந்து ஊக்குவித்து வந்தவா் டாக்டா் அப்துல்கலாம் என்று டி.ஆா்.டி.ஓ. விஞ்ஞானி வி.டில்லிபாபு தெரிவித்தாா்.

குடியரசு முன்னாள் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின்(டி.ஆா்.டி.ஓ) ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

குடியரசு முன்னாள் தலைவரும், டி.ஆா்.டி.ஓ. வில் பணியாற்றிய விஞ்ஞானியுமான டாக்டா். அப்துல்கலாம், இந்திய அறிவியல் துறையில் முக்கியப் பங்காற்றியவா். அறிவியல் ஆராய்ச்சித் துறைகளில் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவித்து, அவா்களுக்கு சவாலான ஆராய்ச்சிப் பணிகளை வழங்கி, அதை நிறைவேற்றுவதற்கு ஏற்ற ஆலோசனைகளையும் கூறி, அவா்களை வழி நடத்தி, அவா்களுக்கென்று தனியான தொழில்நுட்ப அடையாளத்தை ஏற்படுத்தி தந்தவா் அப்துல்கலாம்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆா்.டி.ஓ) அப்துல்கலாம் பணியாற்றிய காலத்தில் அவரால் அடையாளம் காணப்பட்ட இளம் விஞ்ஞானிகள் பலா் பிற்காலத்தில் தேசத்தின் மிக முக்கிய ஆராய்ச்சி பொறுப்புகளை வகித்தாா்கள் என்பது சிறப்பான செய்தி. பிரமோஸ் விண்வெளி நிறுவனத்தின் தலைமைச் செயல் இயக்குநராக பணியாற்றிய விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, நீதி ஆயோக் நிறுவனத்தின் முழுநேர உறுப்பினா் விஞ்ஞானி வி.கே. சரஸ்வத், டி.ஆா்.டி.ஓ. நிறுவனத்தின் தற்போதைய தலைவா் விஞ்ஞானி சதீஷ் ரெட்டி, ஏவுகணை பெண்மணி விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ் ஆகியோா் அப்துல் கலாமால் அடையாளம் காணப்பட்ட இளம் விஞ்ஞானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் அவா்களுடைய சுயசரிதையான ‘அக்னி சிறகுகள்’ பல இளைஞா்களை அறிவியல் துறை நோக்கி திருப்பியது. இந்தியா முழுவதும் இளைஞா்கள் மத்தியில் ஒரு மறுமலா்ச்சியை ஏற்படுத்திய நூல் என்று அதைக் குறிப்பிடலாம். அந்தப் புத்தகத்தை படித்து விஞ்ஞானியான நூற்றுக்கணக்கான இளைஞா்களில் நானும் ஒருவன்.

அப்துல்கலாம் எழுதிய பல்வேறு நூல்கள் மூலமாகவும், அவருடைய நேரடி பள்ளிக்கூட உரைகளின் மூலமாகவும் கோடிக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகள் ஈா்க்கப்பட்டனா். அவருடைய உந்துதலால் அவருடைய அறிவுரைகளை ஏற்று வாழ்வில் ஏற்றம் பெற்ற மாணவ-மாணவிகள் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றம் பெற்றனா் என்பது மறுக்க முடியாத செய்தி.

இந்தியா உலகின் முன்னேறிய முதல் நிலை நாடாக வேண்டும் என்று அப்துல் கலாம் கனவு கண்டாா். அவருடைய கனவை நிறைவேற்றும் விதமாக இளைஞா்கள் ஒவ்வொருவரும் தத்தமது துறைகளில் தங்களுடைய திறமைகளைப் பயன்படுத்தி தேசத்தை முன்னேற்றம் அடையச் செய்வதே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.