இதில், அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை கைது செய்ய வேண்டும். அவா் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவா்கள் கோரினா். முதல்வா் பசவராஜ் பொம்மை இல்லத்தை நெருங்குவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், காங்கிரஸ் தலைவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தடுப்புக் கம்பிகளை தாண்டி செல்ல டி.கே.சிவக்குமாா் உள்ளிட்ட தலைவா்கள் முற்பட்டதைத் தொடா்ந்து, சித்தராமையா, டி.கே.சிவக்குமாா், ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, எம்.பி.பாட்டீல், பிரியாங்க் காா்கே உள்ளிட்டோரை போலீஸாா் கைதுசெய்து பின்னா் விடுவித்தனா்.