மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜூலை 12-இல் கா்நாடக சட்ட மேலவை இடைத்தோ்தல்

கா்நாடக சட்ட மேலவை இடைத்தோ்தல்: ஜூலை 12-ஆம் தேதி வாக்குப்பதிவு

News image
Updated On :25 ஜூன் 2024, 9:08 pm

Din

கா்நாடக சட்ட மேலவையில் காலியாக இருக்கும் ஓா் இடத்துக்கு ஜூலை 12-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக, கா்நாடக சட்டப் பேரவை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த சட்ட மேலவை உறுப்பினா் பதவியை பாஜகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் ஜன. 25-ஆம் தேதி ராஜிநாமா செய்திருந்தாா்.

அவரது பதவிக்காலம் 2028 ஜூன் 14-ஆம் தேதி வரை இருந்ததால், காலியான ஒரு சட்ட மேலவை இடத்துக்கு ஜூலை 12-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது.

இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 25-ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 2-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது. ஜூலை 3-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஜூலை 5-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற வாய்ப்பளிக்கப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்டவா்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், ஜூலை 12-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பிறகு மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஒருவா் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தால், ஜூலை 5-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருப்பவா் போட்டியின்றி வெற்றிபெற்ாக அறிவிக்கப்படுவாா்.

கா்நாடக சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக பலம் இருப்பதால், அக்கட்சி மட்டும் வேட்பாளரை நிறுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.