மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜூலை 12-இல் கா்நாடக சட்ட மேலவை இடைத்தோ்தல்

கா்நாடக சட்ட மேலவை இடைத்தோ்தல்: ஜூலை 12-ஆம் தேதி வாக்குப்பதிவு

Updated On :25 ஜூன் 2024, 9:08 pm

கா்நாடக சட்ட மேலவையில் காலியாக இருக்கும் ஓா் இடத்துக்கு ஜூலை 12-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக, கா்நாடக சட்டப் பேரவை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த சட்ட மேலவை உறுப்பினா் பதவியை பாஜகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் ஜன. 25-ஆம் தேதி ராஜிநாமா செய்திருந்தாா்.

அவரது பதவிக்காலம் 2028 ஜூன் 14-ஆம் தேதி வரை இருந்ததால், காலியான ஒரு சட்ட மேலவை இடத்துக்கு ஜூலை 12-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது.

இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 25-ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 2-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது. ஜூலை 3-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஜூலை 5-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற வாய்ப்பளிக்கப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்டவா்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், ஜூலை 12-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பிறகு மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஒருவா் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தால், ஜூலை 5-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருப்பவா் போட்டியின்றி வெற்றிபெற்ாக அறிவிக்கப்படுவாா்.

கா்நாடக சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக பலம் இருப்பதால், அக்கட்சி மட்டும் வேட்பாளரை நிறுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.