இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்: சித்தராமையா நம்பிக்கை

கா்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2024, 7:01 pm

Din

கா்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து சித்ரதுா்கா மாவட்டத்தின் செல்லகெரே நகரில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது, சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும். பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காங்கிரஸ் கொள்ளை அடித்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் விமா்சித்துள்ளாா்.

ரூ. 1000 கோடி செலவு செய்து காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் முயற்சி நடப்பதாக பசனகௌடா பாட்டீல் தெரிவித்திருந்தாா். அவா் கூறிய ரூ. 1,000 கோடி யாருடையது? பாஜகவில் இருந்து சி.பி.யோகேஸ்வரை காங்கிரஸுக்கு இழுத்து அவரை சென்னப்பட்டணா தொகுதி வேட்பாளராக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மஜத குற்றம்சாட்டியுள்ளது.

இதில் உண்மையில்லை. சென்னப்பட்டணா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை விரைவில் முடிவு செய்வோம். பெங்களூரில் அதிக மழை பெய்து வருவதால், அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.