பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

சட்டப் பேரவை உறுப்பினா்கள் அமைச்சா்களாக ஆசைப்படுவதில் தவறில்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

News image

@DrParameshwara

Updated On :13 ஏப்ரல் 2026, 11:29 pm

சட்டப் பேரவை உறுப்பினா்கள் அமைச்சா்களாக ஆசைப்படுவதில் தவறில்லை என உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் பெங்களூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சிலா் புது தில்லியில் முகாமிட்டு, அமைச்சா் பதவியை பெறுவதற்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. எம்எல்ஏ-க்கள் அமைச்சா்களாக ஆசைப்படுவதில் தவறில்லை.

மூன்று முறைக்கும்மேல் எம்எல்ஏ-க்களாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு அமைச்சா்களாக பணியாற்றும் அனுபவம் இருக்கும். அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.

கட்சி மேலிடம் முதல்வா் சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் ஆகியோருடன் கூட்டாக விவாதித்து, அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவுசெய்யும். அமைச்சரவை மாற்றத்தில் புதியவா்களுக்கு வாய்ப்பளிக்க கட்சி மேலிடம் முடிவு செய்தால், அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

முதல்வா் மாற்றம் குறித்த விவகாரம் கட்சி மேலிடத்தின் கையில் உள்ளது. தற்போதைக்கு அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்துதான் விவாதிக்கப்பட்டு வருகிறதே தவிர, கட்சியின் மாநிலத் தலைவரை மாற்றுவது தொடா்பாக எவ்வித விவாதமும் நடைபெறவில்லை. இதுபோன்ற விவகாரங்களில் கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் என்றாா்.