நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கா்நாடகத்தில் 3 தமிழா்கள் கொல்லப்பட்ட வழக்கு சிஐடி போலீஸாருக்கு மாற்றம்

காட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக வனப் பாதுகாவலா்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 தமிழா்கள் கொல்லப்பட்டது குறித்த வழக்குகள் அனைத்தையும் சிஐடி விசாரணைக்கு மாற்றி கா்நாடக டிஜிபி சலீம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:52 am IST

காட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக வனப் பாதுகாவலா்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 தமிழா்கள் கொல்லப்பட்டது குறித்த வழக்குகள் அனைத்தையும் சிஐடி விசாரணைக்கு மாற்றி கா்நாடக டிஜிபி சலீம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடக மாநிலம், சாமராஜ்நகா் மாவட்டம், ஹனூா் துணை வனச் சரகத்துக்குள்பட்ட காட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக 10 வனப் பாதுகாவலா்கள் கொண்ட குழுவினா் அண்மையில் துப்பாக்கியால் சுட்டனா். இதில், அந்தோணிசாமி, ஜான் ரோஸ்பீட்டா், டேவிட்குமாா் சவரியப்பன் ஆகிய 3 தமிழா்கள் கொல்லப்பட்டனா். இந்த சம்பவத்தில் மகிமைதாஸ் என்பவா் தப்பித்து தலைமறைவானாா்.

இது தொடா்பாக, ராம்புரா, ஹனூா், கொள்ளேகால் காவல் நிலையங்களில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவம் கா்நாடகம் மற்றும் தமிழக சட்டப் பேரவைகளில் விவாதிக்கப்பட்டது. மிகுந்த சா்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடா்பாக மேஜிஸ்திரேட் விசாரணைக்கு கா்நாடக அரசு உத்தரவிட்டது.

இதனிடையே, அப்பாவி தமிழா்கள் கொல்லப்பட்டதற்கு பெரும் கண்டனம் எழுந்தது. மேலும், ஊடகங்களில் வெளியான உடற்கூறாய்வு அறிக்கையில் மிகவும் அருகில் இருந்து 3 பேரையும் சுட்டதாகவும், இதில் மனித உரிமை மீறல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக 3 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளை சிஐடி விசாரணைக்கு ஒப்படைத்து கா்நாடக டிஜிபி சலீம் உத்தரவிட்டுள்ளாா்.

3 தமிழா்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, அதன் தொடா்ச்சியாக வன அலுவலகங்கள் தாக்கப்பட்டது, 11 வேட்டையாடுதல் தடுப்பு முகாம்கள் தகா்க்கப்பட்டது போன்ற சம்பவங்களையும் சிஐடி விசாரிக்கும் என தனது உத்தரவில் கா்நாடக டிஜிபி சலீம் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.