மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாணவர்களை புறக்கணிக்கும் மாநகர பஸ்

பொன்னேரி, பிப். 25:  மாணவர்களை கண்டால் மாநகர பஸ்கள் பஸ் நிறுத்தத்திலேயே நிற்காமல் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ÷பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள மெதூர் கிராமத்தில் உள்ள அரசு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:31 am

ம.சுந்​த​ர​மூ​ர்த்தி

பொன்னேரி, பிப். 25:  மாணவர்களை கண்டால் மாநகர பஸ்கள் பஸ் நிறுத்தத்திலேயே நிற்காமல் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

÷பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள மெதூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் மாநகர பஸ்கள் நிற்பதில்லை எனவும் இதன் காரணமாக அப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக அப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.÷இப் பள்ளியில் திருப்பாலைவனம், வஞ்சிவாக்கம், காவல்பட்டி, கோளூர், அரசூர், பிரளயம்பாக்கம், ஆவூர், முல்லைநகர், அச்சரப்பள்ளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

÷சென்னையை சுற்றிலும் மட்டும் இயக்கப்பட்டு வந்த மாநகர பஸ்கள் செல்லும் தூரத்தை அதிகப்படுத்தி இயக்க அரசு உத்தரவிட்டதன் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, பழவேற்காடு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

÷ஏற்கெனவே மேற்கண்ட ஊர்களுக்கு விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.÷இதில் மாதவரம் மாநகர போக்குவரத்து பணிமனையில் இருந்து செங்குன்றம்-பழவேற்காடு வழித்தடத்தில் பொன்னேரி வழியாக அதிக அளவிலான மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.÷இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த பஸ்கள் மெதூர் அரசு உயர் நிலைப்பள்ளி எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை. இதன் காரணமாக பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல காத்திருக்கும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ÷

அதே நேரத்தில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விழுப்புரம் கோட்ட பஸ்கள் அனைத்தும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு மாணவர்களை ஏற்றி செல்கின்றன. ÷எனவே பள்ளி மாணவர்கள் நலன் கருதி மெதூர் அரசு உயர்நிலைப்பள்ளி பஸ் நிறுத்த்தில் மாநகர பஸ்களை நிறுத்தவும் அதில் மாணவர்களை ஏற்றி செல்லவும் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.