சோதனை செய்வதில் தாமதம்: சுங்கவரி, பாதுகாப்பு, சர்வே, சரக்குப் பெட்டக முனைய அனுமதி உள்ளிட்டவற்றை முடிக்க ஒரு லாரிக்கு 5 நிமிடங்கள் ஆகும். மேலும் சுங்க அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் ஷிப்ட் மாற 2 மணி நேரம் வரை பணிகள் நிறுத்தப்படும். இதில்தான் இறக்குமதியாகும் கன்டெய்னர்களும் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை செல்ல வேண்டும். சுமார் 5 ஆயிரம் கன்டெய்னர்கள் தினமும் ஏற்றுமதி, இறக்குமதிக்காக நுழைவு வாயில்களைக் கடந்து செல்ல வேண்டும். தற்போதுள்ள மூன்று கேட்-கள் வழியாக ஒரு நாளின் 1,440 நிமிடங்களில் எத்தனை லாரிகளை அனுப்ப முடியும் என்பது துறைமுக அதிகாரிகளுக்கே வெளிச்சம்.