காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

400 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை

திருவள்ளூர், அக். 8: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2,286 வாக்குப்பதிவு மையங்களில் 400 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.  திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்கள் மற்றும்

Updated On :20 செப்டம்பர் 2012, 5:19 am IST

திருவள்ளூர், அக். 8: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2,286 வாக்குப்பதிவு மையங்களில் 400 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

 திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 17, 19-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

 இதற்கென மாவட்டம் முழுவதும் 2,286 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் வாக்களிக்கவும் தேவையான பாதுகாப்பு பணிகளில் போலீஸôர் ஈடுபட்டுள்ளனர்.

 இதற்கென மாவட்டம் முழுவதும் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

 அதன்படி திருவள்ளூர், திருத்தணி நகராட்சிகள், ஆரணி, திருமழிசை, ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட 8 பேரூராட்சிகள், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, கடம்பத்தூர், பூண்டி, திருவள்ளூர், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம் ஆகிய ஒன்றியப் பகுதியில் மொத்தம் 2,286 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 இவற்றில் மொத்தம் 400 மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மிக பதற்றமான மையங்கள் குறித்து போலீஸôர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.