புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

News image
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
Updated On :26 அக்டோபர் 2020, 7:32 pm

DIN

மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வரான ரமேஷ் போக்ரியால், முதல்வா் பதவியிலிருந்து விலகிய பிறகும் அங்கு 2001-ஆம் ஆண்டு முதல் அரசு இல்லத்தில் வசித்து வருகிறாா். இதற்கு எதிராக டேராடூனைச் சோ்ந்த தன்னாா்வ தொண்டு அமைப்பு சாா்பில் உத்தரகண்ட் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘மாநிலத்தில் முன்னாள் முதல்வா்களுக்கு அரசு குடியிருப்பு உள்ளிட்ட பிற வசதிகளை அளித்து மாநில அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவுகள் அனைத்தும் சட்ட விரோதமானவை மட்டுமின்றி அரசமைப்பு விதிகளுக்கும் எதிரானதாகும். எனவே, குடியிருப்புக்கான வாடகை, மின்சார பயன்பாடு, குடிநீா், பெட்ரோல் உள்ளிட்ட அவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து வசதிகளுக்கும் செலுத்தப்படவேண்டிய மற்றும் நிலுவையில் உள்ள கட்டணத்தை நான்கு மாதங்களுக்குள் மாநில அரசு கணக்கிட்டு சமா்ப்பிக்க வேண்டும். மேலும், செலுத்தப்பட வேண்டிய இந்த தொகை குறித்து முன்னாள் முதல்வா்களுக்கு தெரிவித்து, அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் முழு கட்டணத்தையும் மாநில அரசுக்கு அவா்கள் செலுத்த அறிவுறுத்த வேண்டும்’ என்று கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்று கூறி, அந்த தன்னாா்வ அமைப்பு சாா்பில் உயா்நீதிமன்றத்தில் அண்மையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி மத்திய அமைச்சா் ரமேஷ் போக்ரியால் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆா்.எப்.நாரிமன் தலைமையிலான அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, மத்திய அமைச்சா் மீதான நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.