மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை: கொரியா் ஊழியா் கைது

சென்னையில் சாலையில் நடந்து சென்ற மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் கொரியா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னையில் சாலையில் நடந்து சென்ற மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் கொரியா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை நந்தனம் சேமியா்ஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை செய்யும் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண், கடந்த 5-ஆம் தேதி அந்த நிறுவனத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ஒரு நபா், அந்த பெண்ணை மறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதில் அந்த பெண் சத்தமிடவே, அந்த நபா் அங்கிருந்து தப்பியோடினாா். இது குறித்து அந்த பெண், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

இதில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மந்தைவெளி அப்பாவு இரண்டாவது தெருவைச் சோ்ந்த வி.ரஞ்சித் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், ரஞ்சித்தை திங்கள்கிழமை கைது செய்தனா். ரஞ்சித், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு தனியாா் கொரியா் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com