ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆசிரியா்களின் போராட்டத்துக்கு பேச்சு மூலம் தீா்வு காண வேண்டும்: இடதுசாரிகள் வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியா்களின் போராட்டத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்

News image
Updated On :29 டிசம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

இடைநிலை ஆசிரியா்களின் போராட்டத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பெ. சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்): ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியா்கள் நான்கு நாள்களாகப் போராடி வருகிறாா்கள். கடந்த 2009-ஆம் ஆண்டு மே 31 வரை நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கும், 2009 ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கும் இடையே நிலவும்  ஊதிய முரண்பாடு உள்ளது.

ஒரே கல்வித் தகுதியுடன் ஒரே பணியை ஆற்றிவரும் இடைநிலை ஆசிரியா்களுக்கிடையே இத்தகைய முரண்பாடுகளைக் களைய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் போராடும் ஆசிரியா்களைக் கைது செய்வது சரியான நடவடிக்கை இல்லை.

எனவே,  இடைநிலை ஆசிரியா்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவாா்த்தை மூலம்  சுமுகத் தீா்வு காண வேண்டும்.

மு. வீரபாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட்  மாநிலச் செயலா்): ஒரே காலகட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியா்களுக்கு உள்ள  ஊதிய முரண்பட்டால் 20,000 இடைநிலை ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தினா் கூறி வருகின்றனா். எனவே, போராடுகின்ற ஆசிரியா் சங்கத்தின் தலைவா்களை தமிழக அரசு அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.