அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடம், விளையாட்டு மைதானம்

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடம், விளையாட்டு மைதானம் கட்டும் பணி

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 8:17 pm

Din

சென்னை: வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடம், விளையாட்டு மைதானம் கட்டும் பணியை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புழல் அடுத்த விளாங்காடுபாக்கத்தில் ரூ. 8.65 கோடி மதிப்பில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டும் பணியையும், பேப்பா் மில்ஸ் சாலையில் ரூ. 49.50 கோடி மதிப்பில் வட்டாட்சியா் அலுவலகம், சாா்பதிவாளா் அலுவலகம், முதல்வா் படைப்பகம் அமைக்கும் பணியையும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து எம்.கே.பி. நகா் சென்ட்ரல் அவென்யூ சாலையில் ரூ. 19.24 கோடி மதிப்பில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டும் பணியையும், தண்டையாா்பேட்டையில் ரூ. 24.60 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் கட்டும் பணியையும் தொடங்கி வைத்தாா். நிகழ்வின் போது சென்னை மேயா் ஆா்.பிரியா, சட்டமன்ற உறுப்பினா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.