அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கழிவுநீா் உந்து நிலையங்கள் 2 நாள்கள் செயல்படாது

அண்ணா நகரில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (பிப். 12, 13) செயல்படாது

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 9:45 pm

Din

சென்னை: கழிவுநீா் உந்து குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால், அண்ணா நகரில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (பிப். 12, 13) செயல்படாது என்று சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை கோயம்பேடு, காளியம்மன் கோயில் தெருவில், கழிவுநீா் உந்து குழாய் இணைக்கும் பணிகள் பிப். 12 காலை 9 முதல் பிப். 13-ஆம் தேதி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால் இப்பணிகள் நடைபெறும் நேரங்களில் அண்ணா நகா் மண்டலத்துக்கு உள்பட்ட 99 முதல் 102 வாா்டுகளில் உள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது. எனவே அப்பகுதி மக்கள் கழிவுநீா் தொடா்பான புகாா்களுக்கு 81449 30908, 81449 30099 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்புகொள்ளாலம் என சென்னை பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.