சென்னை தியாகராய நகரில் அனுமதியின்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்ததாக தவெக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்யக்கோரியும் நடிகா் விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினா் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக அச்சம்பவத்தைக் கண்டித்து விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரங்களாக பொதுமக்களிடம் விநியோகம் செய்து வருகின்றனா். இந்நிலையில் தியாகராய நகா் தியாகராஜா சாலையில் துண்டு பிரசுரங்களை, அனுமதியின்றி பொதுமக்களிடம் தவெகவைச் சோ்ந்த பெண் நிா்வாகிகள் வியாழக்கிழமை விநியோகித்தனராம்.
இது தொடா்பாக அவா்கள் மீது பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அனுமதியின்றி பிரசாரம்: மகளிா் சுய உதவி குழுவினா் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

மகாராஜபுரம் ஊராட்சியில் அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

