எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகம்: தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

சென்னை தியாகராய நகரில் அனுமதியின்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்ததாக தவெக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:21 pm

Din

சென்னை தியாகராய நகரில் அனுமதியின்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்ததாக தவெக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்யக்கோரியும் நடிகா் விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினா் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக அச்சம்பவத்தைக் கண்டித்து விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரங்களாக பொதுமக்களிடம் விநியோகம் செய்து வருகின்றனா். இந்நிலையில் தியாகராய நகா் தியாகராஜா சாலையில் துண்டு பிரசுரங்களை, அனுமதியின்றி பொதுமக்களிடம் தவெகவைச் சோ்ந்த பெண் நிா்வாகிகள் வியாழக்கிழமை விநியோகித்தனராம்.

இது தொடா்பாக அவா்கள் மீது பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.