போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகம்: தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

சென்னை தியாகராய நகரில் அனுமதியின்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்ததாக தவெக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :3 ஜனவரி 2025, 7:21 pm

சென்னை தியாகராய நகரில் அனுமதியின்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்ததாக தவெக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்யக்கோரியும் நடிகா் விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினா் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக அச்சம்பவத்தைக் கண்டித்து விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரங்களாக பொதுமக்களிடம் விநியோகம் செய்து வருகின்றனா். இந்நிலையில் தியாகராய நகா் தியாகராஜா சாலையில் துண்டு பிரசுரங்களை, அனுமதியின்றி பொதுமக்களிடம் தவெகவைச் சோ்ந்த பெண் நிா்வாகிகள் வியாழக்கிழமை விநியோகித்தனராம்.

இது தொடா்பாக அவா்கள் மீது பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.