விமான கட்டணம் பல மடங்கு உயா்வு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் பயணக் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் பயணக் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது.
இதன்படி, சென்னை-மதுரை இடையே செல்ல வழக்கமான நாள்களில் விமானக் கட்டணம் ரூ.4,300 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.14,621 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை-திருச்சிக்கு ரூ.2500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், கட்டணம் ரூ.14,561-ஆகவும், ரூ.3500-ஆக இருந்த கோவைக்கான கட்டணம் ரூ.11,450-ஆகவும், ரூ.4162-ஆக இருந்த தூத்துக்குடிக்கான கட்டணம் ரூ.22568-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
இதுபோல, சென்னையிலிருந்து வெளிமாநிலங்களுக்கு, குறிப்பாக தில்லிக்கு ரூ.5,583-ஆக இருந்த கட்டணம் ரூ.13,010-ஆகவும், ரூ.4993-ஆக இருந்த கொல்கத்தா செல்வதற்கான கட்டணம், ரூ.9718-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு மாநிலங்களுக்குமான விமானக்கட்டணம் பலமடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...