தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

440 கிலோ புகையிலை பொருள்கள் கடத்தல்: சென்னையில் 2 போ் கைது

சென்னையில் 440 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2025, 10:18 pm

Din

சென்னை: சென்னையில் 440 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

சென்னை, புனித தோமையா்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அதிகளவு புகையிலைப் பொருள்கள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி, ஆலந்தூா் உள்வட்ட வளைவு சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்ட போது, அதில் தடைசெய்யப்பட்ட 440 கிலோ புகையிலைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த சைதாப்பேட்டையை சோ்ந்த சம்சுதீன்(34) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த பீருஷாஹா ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.