ரூ.564 கோடியில் சேலத்தில் கால்நடை உயா் ஆராய்ச்சி நிலையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்
சேலம், தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயா் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

’தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் விழுப்புரம் மாவட்டம் வி.மருதூா், ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாகங்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் கட்டப்பட்ட அரசின் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.









