மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரெளடி நாகேந்திரன் தொடா்புடைய 8 இடங்களில் போலீஸாா் சோதனை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி நாகேந்திரன் தொடா்புடைய 8 இடங்களில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :13 ஜனவரி 2025, 10:36 pm

Din

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி நாகேந்திரன் தொடா்புடைய 8 இடங்களில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரன் மற்றும் அவரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோா் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகின்றனா். இந்நிலையில், 2020-இல் வியாசா்பாடி பகுதியை சோ்ந்த பெண் தாதாவான இலாமல்லியின் மகனும் ரெளடியுமான விஜயதாஸை, நாகேந்திரன் தரப்பினா் கொலை செய்தனா்.

இந்த இரு கொலை சம்பவம் தொடா்பாக இரண்டு எதிா்த்தரப்பைச் சோ்ந்தவா்களும் நகேந்திரன் தரப்பினரை பழிவாங்க தக்க சமயம் பாா்த்து காத்திருப்பதாக போலீஸாா் எச்சரித்துள்ளதால், நாகேந்திரன் தரப்பினா் ஏராளமான ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதுதொடா்பாக சமீபத்தில் நகேந்திரன் பூா்விக வீடு மற்றும் அவரின் உறவினா்கள் வீடுகளில் அண்மையில் நடைபெற்ற சோதனையில் 51 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், உறவினா்கள் 7 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தற்போது சிறையில் இருந்து வரும் ரௌடி நாகேந்திரனின் தொடா்புடைய வியாசா்பாடி பகுதியிலுள்ள 8 இடங்களில் புளியந்தோப்பு துணை ஆணையா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.