புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொக்கைன் போதைப்பொருள் விற்பனை: இருவா் கைது

சென்னை சூளைமேட்டில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2025, 9:55 pm

Din

சென்னை: சென்னை சூளைமேட்டில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சூளைமேடு அண்ணா நெடும்பாதை ராகவன் தெரு சந்திப்பில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 2 காரை வழிமறித்து சோதனையிட்டனா். அதில், 3.93 கிராம் எடை கொண்ட ‘கொக்கைன்’ போதைப்பொருள் சிக்கியது.

பின்னா் காரிலிருந்த 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோயில் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பயாஸ் அகமது (31), கோயம்பேடு ரெயில் நகா் ஜி.டி.சாலையைச் சோ்ந்த சந்திரசேகா் (35) என்பது தெரியவந்தது.

இது தொடா்பக சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.