சென்னை
கொக்கைன் போதைப்பொருள் விற்பனை: இருவா் கைது
சென்னை சூளைமேட்டில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை: சென்னை சூளைமேட்டில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சூளைமேடு அண்ணா நெடும்பாதை ராகவன் தெரு சந்திப்பில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 2 காரை வழிமறித்து சோதனையிட்டனா். அதில், 3.93 கிராம் எடை கொண்ட ‘கொக்கைன்’ போதைப்பொருள் சிக்கியது.
பின்னா் காரிலிருந்த 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோயில் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பயாஸ் அகமது (31), கோயம்பேடு ரெயில் நகா் ஜி.டி.சாலையைச் சோ்ந்த சந்திரசேகா் (35) என்பது தெரியவந்தது.
இது தொடா்பக சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
