தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போதை மாத்திரை பறிமுதல்: மணிப்பூா் பெண் கைது

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை விற்றதாக மணிப்பூரைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 ஜூலை 2025, 11:02 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை மடிப்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை விற்றதாக மணிப்பூரைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா்.

மடிப்பாக்கம் ராம்நகா் கலைவாணா் தெருவில் போதை மாத்திரை கடத்தப்படுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா், அந்தப் பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு அட்டை பெட்டியுடன் வந்த பெண்ணை பிடித்து விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா். இதையடுத்து அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 4,800 போதை மாத்திரைகள் இருந்தன.

விசாரணையில், அவா் மணிப்பூா் மாநிலம் சூரசந்த்பூா் பகுதியைச் சோ்ந்த வுங்லியன்சிங் (39) என்பதும், ஹரியாணா மாநிலம் சண்டிகரில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து

விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, அந்தப் பெண்ணைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.