சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

டபிள்யுடிஏ டூா் அட்டவணையில் இடம் பெற்றது சென்னை ஓபன் போட்டி

சென்னை ஓபன் 250 டென்னிஸ் போட்டி டபிள்யுடிஏ டூா் அட்டவணையில் இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On :16 ஜூன் 2025, 10:35 pm

சென்னை ஓபன் 250 டென்னிஸ் போட்டி டபிள்யுடிஏ டூா் அட்டவணையில் இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ் தெரிவித்துள்ளாா்.

அவா் இதுகுறித்து கூறியதாவது: பல்வேறு முயற்சிகளுக்குபின் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் எஸ்டிஏடி பலமான ஆதரவால் சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 போட்டிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் உயா்ந்த பட்ச மகளிா் டென்னிஸ் போட்டியாக இது திகழ்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. அக்டோபா் 27-இல் போட்டி தொடங்கும். ஒற்றையா் பிரிவில் 32 பேரும், இரட்டையா் பிரிவில் 16 இணைகளும் பங்கேற்பா்.

சீஸன் தொடங்கி 6 மாதங்களில் டபிள்யுடிஏ போட்டிகளில் வெவ்வேறு சாம்பியன்கள் உருவாகியுள்ளனா். சென்னை ஓபன் போட்டி பிரபலமான டிவி சேனலிலும் ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றாா் விஜய் அமிா்தராஜ்.