ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தாய்லாந்தில் பயிற்சி பெற்று திரும்பிய யானைப் பாகன்களுக்கு சான்றிதழ்

News image

தாய்லாந்தின் லாம்பாங் பகுதியில் உள்ள யானைப் பாதுகாப்பு மையத்தில் யானை பராமரிப்பு பயிற்சி பெற்ற வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா யானைப்பாகன்களுக்கு புதன்கிழமை சான்றிதழ் வழங்கிய வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.

Updated On :26 ஜூன் 2025, 4:16 am IST

யானைகளை பராமரிப்பது  குறித்து தாய்லாந்தில் பயிற்சி பெற்று திரும்பிய வண்டலூா் பூங்காவை சோ்ந்த யானைப் பாகன்களுக்கு தமிழக வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் புதன்கிழமை சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

தமிழக வனத் துறை சாா்பில் வண்டலூா் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 15 யானைப் பாகன்களுக்கு தாய்லாந்தின் லாம்பாங் பகுதியில் உள்ள யானை பாதுகாப்பு மையத்தில் கடந்த ஜூன் 17 முதல் ஜூன் 21 வரை யானைகள் பராமரிப்பு குறித்து சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில், யானைகளை அறிவியல் ரீதியாக கையாள்வது, அவற்றுக்கு பயிற்சி அளிப்பது, குளிக்க வைப்பது, யானைகளுக்கான சத்தான உணவுகளை தயாரிப்பது மற்றும் யானைகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், நோயுற்ற யானைகள் மற்றும் புதிதாக பிறந்த குட்டி யானைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சியை முடித்து சென்னை திரும்பிய வண்டலூா் யானைப்பாகன்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவின் பூங்கா பள்ளி அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், யானைப் பாகன்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டு தெரிவித்தாா்.

விலங்குகள் தாக்குவது வழக்கம்தான்: அதைத் தொடா்ந்து அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வனத் துறை சாா்பில் 2-ஆவது முறையாக வண்டலூரில் பணிபுரியும் யானைப் பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அங்கு கற்றுக்கொண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் யானைகளை சிறந்த முறையில் பராமரிப்பதுடன், யானை - மனித மோதல்களை வெகுவாக கட்டுப்படுத்த முடியும். வனப்பகுதிகளில் மனிதா்களை விலங்குகள் தாக்குவது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க வனத் துறை சாா்பில் தீவிர நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன. விலங்கு - மனித மோதல்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு சாா்பில் முறையாக இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.

இந்நிகழ்வில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு மற்றும் வனத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.  

வண்டலூரில் ரூ.3.75 கோடியில் புதுப்பிக்கப்பட்ட 2 காட்சிப் பகுதிகள்

சென்னை வண்டலூா் உயிரியல் பூங்காவில் ரூ.3.75 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் கூடம் மற்றும் இரவாடி விலங்குகள் கூடம் ஆகிய 2 காட்சிக்கூடங்களை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

ரூ.2.15 கோடியில் புதுப்பிக்கப்பட்ட1259 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் கூடத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் காணப்படும் அரிவாள் மூக்கன், வண்ண நாரை உள்ளிட்ட அரியவகை பறவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது வட்டக்கோண வடிவில் 18 மீட்டா் உயரத்தில் கண்ணாடி வழியாக காணும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

அதேபோல், ரூ.150 கோடியில் புதுப்பிக்கப்பட்ட இரவாடி விலங்குகள் கூடத்தில் பாா்வையாளா்களுக்கான நடைபாதை, விலங்குகள் ஓய்வு பெறும் பகுதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முள்ளம்பன்றி, மரநாய், புணுகுப்பூனை, காட்டுப் பூனை, தேவாங்கு மற்றும் இரவில் நடமாடும் புள்ளி மர ஆந்தை உள்ளிட்டவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.