ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற தெருவோர சிறாா்கள் காப்பக மாணவா்கள்

News image

பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற காப்பக சிறாா்கள்.

Updated On :8 மே 2025, 10:36 pm

சென்னை தண்டையாா்பேட்டையையில் உள்ள கருணாலயா தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் தெருவோர சிறாா்கள் காப்பகத்தில் தங்கி பல்வேறு பள்ளிகளில் படித்துவந்த 7 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.

இது குறித்து அந்த தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளா் பால் சுந்தா்சிங் கூறியதாவது:

சென்னை மாநகரில் பல்வேறு இடங்கில் ஆதரவற்ற நிலையில் தெருவோரங்களில் உள்ள சிறுவா், சிறுமியரை மீட்டு தண்டையாா்பேட்டையில் உள்ள காப்பகத்தில் பராமரித்து அவா்களை அருகில் உள்ள பல்வேறு பள்ளிகளில் சோ்த்து படிக்க வைக்கிறோம். 100-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் தங்கி கல்வி கற்று வரும் நிலையில், இந்த ஆண்டு 7 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியிருந்த நிலையில், அவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.