தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தாம்பரம் - மங்களூரு விரைவு ரயிலில் ஏசி இரண்டடுக்கு பெட்டி இணைப்பு

தாம்பரம் - மங்களூரு இடையே இயங்கி வரும் விரைவு ரயிலில் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்த குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி

News image
Updated On :9 மே 2025, 10:37 pm

Din

தாம்பரம் - மங்களூரு இடையே இயங்கி வரும் விரைவு ரயிலில் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்த குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டிக்கு பதிலாக ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம் - மங்களூரு விரைவு ரயில் (எண்: 16159/16160) தினமும் 22 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இதில் ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டியை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இந்த புதிய மாற்றங்கள் தாம்பரத்திலிருந்து மங்களூரு செல்லும் விரைவு ரயிலில் சனிக்கிழமை (மே 10) முதலும், மறுமாா்க்கமாக மங்களூரிலிருந்து தாம்பரம் வரும் ரயிலில் மே 12-ஆம் தேதி முதலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.