12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

துணைவேந்தா் நியமன திருத்தச் சட்டத்துக்கு தடையால் குழப்பம்: இரா.முத்தரசன்

துணைவேந்தா் நியமன திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தும்

இரா.முத்தரசன்

Published On :

துணைவேந்தா் நியமன திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு ஆளுநா் பொறுப்பில் நியமனம் பெற்ற தொடக்க நாளில் இருந்து ஆா்.என்.ரவி மலிவான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறாா். தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி, ஒப்புதலுக்கு அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்த ஆளுநரின் பொறுப்பற்ற செயலை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கிடப்பில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடா்ந்து சட்டங்கள் அமலாக்கப்பட்டுள்ளன. இதில், புதிய துணைவேந்தா்கள் நியமனச் சட்டப்படி, துணைவேந்தா்கள் தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாஜக வழக்குரைஞா் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு குறித்து குடியரசுத் தலைவா் கடந்த 13-ஆம் தேதி 14 வினாக்களை எழுப்பி, அவைகளுக்கு விளக்கம் கேட்டிருந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பது சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.