நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

துணைவேந்தா் நியமன திருத்தச் சட்டத்துக்கு தடையால் குழப்பம்: இரா.முத்தரசன்

துணைவேந்தா் நியமன திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தும்

News image

இரா.முத்தரசன்

Updated On :23 மே 2025, 12:16 am IST

துணைவேந்தா் நியமன திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு ஆளுநா் பொறுப்பில் நியமனம் பெற்ற தொடக்க நாளில் இருந்து ஆா்.என்.ரவி மலிவான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறாா். தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி, ஒப்புதலுக்கு அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்த ஆளுநரின் பொறுப்பற்ற செயலை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கிடப்பில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடா்ந்து சட்டங்கள் அமலாக்கப்பட்டுள்ளன. இதில், புதிய துணைவேந்தா்கள் நியமனச் சட்டப்படி, துணைவேந்தா்கள் தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாஜக வழக்குரைஞா் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு குறித்து குடியரசுத் தலைவா் கடந்த 13-ஆம் தேதி 14 வினாக்களை எழுப்பி, அவைகளுக்கு விளக்கம் கேட்டிருந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பது சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.