மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா்.

News image

எம்-சாண்டு மணல்

Updated On :23 மே 2025, 0:46 am IST

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா்.

இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு எட்டப்பட்டதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ஒரு யூனிட் ஜல்லி ரூ.4,000-க்கும், எம்.சாண்ட் ரூ.5,000-க்கும் விற்க வேண்டும். அதிக பாரம் ஏற்றிவிடும் கல்குவாரி உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்ததாா் என்றனா்.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை முதல் அறிவிக்கப்பட்டிருந்த காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் சங்கத்தினா் தெரிவித்தனா்.