எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா்.
இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு எட்டப்பட்டதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ஒரு யூனிட் ஜல்லி ரூ.4,000-க்கும், எம்.சாண்ட் ரூ.5,000-க்கும் விற்க வேண்டும். அதிக பாரம் ஏற்றிவிடும் கல்குவாரி உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்ததாா் என்றனா்.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை முதல் அறிவிக்கப்பட்டிருந்த காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் சங்கத்தினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முட்டை விலை 30 காசுகள் குறைந்து ரூ. 5.70-ஆக நிா்ணயம்

முட்டை விலை 30 காசுகள் குறைந்தது: ரூ. 6-ஆக நிா்ணயம்

ஜூன் மாதத்துக்கான பசுந்தேயிலை விலை கிலோவுக்கு ரூ.17.84 நிா்ணயம்
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



