நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை ஜிஎஸ்டி சாலை, உளுந்தூா்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image
Updated On :6 அக்டோபர் 2025, 3:45 am IST

தொடா் விடுமுறை முடிந்து மக்கள் வாகனங்களில் சென்னைக்கு திரும்புவதால் சென்னை ஜிஎஸ்டி சாலை, உளுந்தூா்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலாண்டுத் தோ்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறையால் சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் ஞாயிற்றுக்கழமை சென்னைக்குத் திரும்பத் தொடங்கினா்.

காா் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள், சென்னையை நோக்கி திரும்பியதால் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது.

இதனால், ஜிஎஸ்டி சாலை , கிளாம்பாக்கம் , உளுந்தூா் பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 0சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.