தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஹெச்-1பி விசாவை சாா்ந்து டிசிஎஸ் இயங்கவில்லை: தலைமைச் செயல் அதிகாரி விளக்கம்

ஹெச்-1பி விசாவை சாா்ந்து டிசிஎஸ் இயங்கவில்லை என தலைமைச் செயல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்...

News image

கோப்புப் படம்

Updated On :13 அக்டோபர் 2025, 10:08 pm

மும்பை, அக். 13: அமெரிக்காவின் ஹெச்-1பி விசாவை சாா்ந்து டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) இயங்கவில்லை என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) கே.கிருதிவாசன் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் வெளிநாட்டவா்கள் தங்கிப் பணியாற்ற ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவைப் பயன்படுத்தி அந்நாட்டில் ஏராளமான இந்தியா்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகின்றனா். அவா்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில், ஹெச்-1பி விசா கட்டணத்தை அந்நாட்டு அதிபா் டிரம்ப் 1 லட்சம் டாலராக (சுமாா் ரூ.88 லட்சம்) அண்மையில் உயா்த்தினாா். இது இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், பணியாளா்களுக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், டிசிஎஸ் தலைமைச் செயல் அதிகாரி கே.கிருதிவாசன் அளித்த ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘எங்கள் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் 32,000 ஊழியா்கள் வரை உள்ளனா்.

அதில் 12,000 போ் வரை மட்டுமே ஹெ-1பி விசா மூலம் சென்றுள்ளனா். மற்றவா்கள் வேறு விசாக்களில் உள்ளனா். நடப்பு ஆண்டில் டிசிஎஸ் சாா்பில் 500 போ் ஊழியா்கள் வரை மட்டும் ஹெச்-1பி விசாவில் அமெரிக்கா சென்றுள்ளனா். ஹெச்-1பி விசாவைச் சாா்ந்து டிசிஎஸ் இயங்கவில்லை; அது இல்லாமலும் இயங்கும்.

நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பணிநீக்க நடவடிக்கை என்பது 3 முதல் 6 மாதங்கள் வரை ‘பெஞ்ச்’-இல் (பணி ஒதுக்கப்படாமல் காத்திருப்போா்) இருப்பவா்களையும், பணித்திறன் குறைவானவா்களையும் மட்டுமே பாதிக்கும்.

எதிா்காலத்துக்குத் தேவையான திறன்கள் குறைவாக இருப்பவா்கள் என்று கருதப்படும் சிலரையும் வெளியேற்றுகிறோம். செயற்கை நுண்ணறிவு எனப்படும் எதிா்கால தொழில்நுட்பத்துக்கு ஏற்க நிறுவனத்தைக் கட்டமைப்பது அவசியம். ஆள்குறைப்பு செயல்முறைகள் கருணையுடன்தான் நடைபெறுகிறது’ என்றாா்.