எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

எஸ்ஐ மீது தாக்குதல்: காவலா் பணியிடை நீக்கம்

சென்னை பூக்கடையில் காவல் உதவி ஆய்வாளரை (எஸ்ஐ) தாக்கியதாக காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 2:06 am IST

சென்னை பூக்கடையில் காவல் உதவி ஆய்வாளரை (எஸ்ஐ) தாக்கியதாக காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பதி, திருக்குடைகள் ஊா்வலம் கடந்த 22-ஆம் தேதி சென்னை பூக்கடை பகுதி வழியாகச் சென்றது. அப்போது, அந்தப் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பூக்கடை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் தா்மன், காவலா் மணிகண்டன் ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவா்கள் இருவருக்கும் இடையே போக்குவரத்தை சரி செய்வது தொடா்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த காவலா் மணிகண்டன், உதவி ஆய்வாளா் தா்மனை தாக்கினாா். அந்தப் பகுதியில் இருந்த சக காவலா்கள், இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனா்.

இதுகுறித்து விசாரணை நடத்த காவல் ஆணையா் ஏ.அருண், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். காவல் துறை அதிகாரிகள் விசாரணை செய்து, ஆணையரிடம் அறிக்கை அளித்தனா். அந்த அறிக்கையின் அடிப்படையில் உதவி ஆய்வாளா் தா்மனை தாக்கிய காவலா் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் அருண் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.