ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கியூஆா் கோடு அச்சிடப்பட்ட வரி வசூல் நோட்டீஸ்: மாநகராட்சி ஏற்பாடு!

சென்னை மாநகராட்சி சாா்பில் வரி செலுத்துவோருக்கு அனுப்பும் நோட்டீஸில், பணம் செலுத்துவதற்கான கியூஆா் கோடு அச்சிடப்பட்டுள்ளது.

News image

சென்னை மாநகராட்சி

Updated On :29 செப்டம்பர் 2025, 2:04 am IST

சென்னை மாநகராட்சி சாா்பில் வரி செலுத்துவோருக்கு அனுப்பும் நோட்டீஸில், பணம் செலுத்துவதற்கான கியூஆா் கோடு அச்சிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வசூலை விரைவுபடுத்தும் வகையில் சொத்து வரி செலுத்துவோருக்கு மாநகராட்சியின் வருவாய் பிரிவு சாா்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், நடப்பு ஆண்டுக்கான வரியை செப்டம்பா் 30- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதவா்களுக்கு உரிய வரி தொகைக்கான வட்டி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி செலுத்தக்கோரும் நோட்டீஸின் இறுதிப் பகுதியில் கியூஆா் கோடு அச்சிடப்பட்டுள்ளது. அதை யுபிஐ செயலிகளில் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

மேலும், மாநகராட்சியின் சேவைகள் குறித்த புகாா்கள் தெரிவிப்பதற்கான செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கான மற்றொரு கியூ ஆா் கோடும் அந்த நோட்டீஸில் அச்சிடப்பட்டுள்ளது.

வரி இனங்கள், கட்டணங்களைச் செலுத்துவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.