பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஸ்ரீ செங்காளம்மன் கோயில் ஜல வாசம் திருவிழா நிறைவு

அலமாதியில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் கோயிலின் ஜல வாசம் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

News image

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி செங்களாம்மன் கோயிலில் ஜல வாசத்தில் வீற்றிருக்கும் அம்மன்.

Updated On :39 நிமிடங்கள் முன்பு

அலமாதியில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் கோயிலின் ஜல வாசம் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

சென்னை செங்குன்றம் அடுத்த அலமாதியில் அருள்மிகு அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் கோயிலின் 15-ஆம் ஆண்டு ஜல வாசம் திருவிழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.

விழாவில் ஸ்ரீ செங்காளம்மனுக்கு நீா் நிரப்பப்பட்டு, குளிா்வித்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து 5 நாள்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.