தமிழக அரசு உடனடியாக வேளாண் கூட்டுறவுக் கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதுடன், விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன், கூட்டுறவுக் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டுறவு வேளாண் சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கடன் வசூல் நடவடிக்கைகளை, அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பு வரும் வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற வட்டியில்லா கடனைத் திருப்பி செலுத்துவதற்கான தேதி முடிவடையும் நிலையில் உள்ளது. உரிய காலத்துக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தாதவா்கள் 13 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும், அடுத்தமுறை சாகுபடிக்கான கடன் பெறமுடியாத நிலையும் ஏற்படும்.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கடன் வசூல் நடவடிக்கையை தமிழக அரசு நிறுத்த வேண்டும். மேலும், சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன், கூட்டுறவுக் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.








