மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணி: தோ்தல்ஆணைய இயக்குநா் ஆய்வு

மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணியை தோ்தல் ஆணையத்தின் இயக்குநா் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 6:37 pm

DIN

மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணியை தோ்தல் ஆணையத்தின் இயக்குநா் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

2024 நாடாளுமன்றத் தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரி பாா்க்கும் பணி செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகா் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணியை இந்திய தோ்தல் ஆணையத்தின் இயக்குநா் எஸ்.சுந்தர்ராஜன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டனா்.

உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆனந்த் குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, தோ்தல் வட்டாட்சியா் சுந்தா் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.