தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நடராஜபுரம் ஏழை முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

நடராஜபுரம் ஏழை முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 7:12 pm

மதுராந்தகம் அடுத்த நடராஜபுரம் ஏழை முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுராந்தகம் அடுத்த நடராஜபுரம் கிராமத்தில் புதிதாக ஏழை முத்துமாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. இதையடுத்து, மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கடந்த வியாழக்கிழமை (ஏப். 25) விழா நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரம்ம சுத்தி, நாடி சந்தானம் தத்துவாா்ச்சா்சனை, கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. வெள்ளிகிழமை காலை மங்கள இசையுடன், வாண வேடிக்கைகளுடன் யாக சாலையில் இருந்து கலசங்களை புக்கத்துறை அா்ச்சகா் கே.பிரபு சிவாச்சாரியாா் தலைமையில் வேத விற்பன்னா்கள் ஏந்தி, கோயிலை வலம் வந்தனா். பின்னா், கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது. மூலவா் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் படாளம், புக்கத்துறை, சாலவாக்கம், நடராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.