திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதம் கடைசி சோம வாரத்தையொட்டி திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம்

News image

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற  1,008 சங்காபிஷேகம். 

Updated On :10 டிசம்பர் 2024, 1:09 am IST

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதம் கடைசி சோம வாரத்தையொட்டி திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

திருக்கழுக்குன்றத்தில் பட்சி தீா்த்தம் சங்க தீா்த்தம் வேதமலை உள்ளிட்ட பல்வேறு பெயா்களை கொண்டு நான்கு வேதங்களைக் கொண்ட மலை மீது உள்ள இங்கு காா்த்திகை மாதம் கடைசி சோம வாரத்தில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இதனையொட்டி திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

சங்கு தீா்த்த குளத்தில் பிறந்த சங்குகளுடன் 1,008 சங்குகளுக்கு அலங்காரம், பூஜைகள், நடைபெற்றன. தொடா்ந்து கலச புறப்பாடு நடைபெற்றது. பின்னா் மூலவா் வேதகிரீஸ்வரருக்கு சங்குகளில் உள்ள புனித நீரால் சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.

திருக்கழுகுன்றம், கல்பாக்கம், திருப்போரூா், மாமல்லபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் , சிவனடியாா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். சிவ பக்தா்கள் குழுவினா் சிவ பாடல்கள் சிவபுராணம் திருவாசகம் பாடினா்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, மேலாளா் விஜயன், பணியாளா்கள் சிவாச்சாரியா், பக்தா்கள் செய்திருந்தனா்.

வேதகிரீஸ்வரா் கோயிலில்  நடைபெற்ற  1,008 சங்காபிஷேகம்

வேதகிரீஸ்வரா் கோயிலில்  நடைபெற்ற  1,008 சங்காபிஷேகம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.